கையில் கிடைத்த களிமண்ணை
விருப்பப்படி வளைப்பது போல தான்
ஒவ்வொரு நாளும் விதவிதமாய்
உருவாக்குகிறாய் என்னை
காய்ந்து உடையும் பாகங்களைப் பற்றி
நீ கவலைப்படுவதேயில்லை
உன்னுடைய தேவையெல்லாம்
கொஞ்சம் தண்ணீர் மட்டுமே
கிடைத்ததும் புது உருவம் புது
விளையாட்டு
இரத்தம் கசியவில்லை என்பதால் காயமில்லை
என்று பொருள் கொள்கிறாய்
மரணத்தை வேண்டுவது போல தான்
உன்னிடம் காதலை வேண்டுவதும்
என்றாவது கிடைக்கும் அன்று நான்
இல்லாதிருப்பேன்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.