Wednesday 9 April 2014

மரணத்தை வேண்டுவது



கையில் கிடைத்த களிமண்ணை
விருப்பப்படி வளைப்பது போல தான்
ஒவ்வொரு நாளும் விதவிதமாய்
உருவாக்குகிறாய் என்னை
காய்ந்து உடையும் பாகங்களைப் பற்றி
நீ கவலைப்படுவதேயில்லை
உன்னுடைய தேவையெல்லாம்
கொஞ்சம் தண்ணீர் மட்டுமே
கிடைத்ததும் புது உருவம் புது விளையாட்டு
இரத்தம் கசியவில்லை என்பதால் காயமில்லை
என்று பொருள் கொள்கிறாய்
மரணத்தை வேண்டுவது போல தான்
உன்னிடம் காதலை வேண்டுவதும்
என்றாவது கிடைக்கும் அன்று நான் இல்லாதிருப்பேன்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.