Wednesday 9 April 2014

எங்கோ இசைக்கும் பாடல்



உன் சாயலற்ற ஒருவன் இசைக்கிறான் எனக்கானப் பாடலை
உன் சாயலுள்ள ஒருவன் இசைக்கிறான் வேறொரு பாடலை
இருவரையும் கடக்கிறேன் எவ்வித சலனமும் இல்லாமல்
ஒவ்வொரு ரயில் பயணங்களிலும் தவிர்க்க முடியாமல் கடக்கிறேன்
பார்வையற்றவனின் புல்லாங்குழல் வழியே கசியும்
எவரோ ஒருவரின் நினைவுகளைச் சுமந்த பாடலை
ஏதோ ஒரு முடிவற்ற சாலையில் நீயும் இசைக்கக்கூடும்
            என் நினைவுகள் சுமந்த பாடலை
என்றேனும் அது எனக்கான பாடல் என்பதை
            நானே மறந்திருக்கக்கூடும்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.