உன் சாயலற்ற ஒருவன் இசைக்கிறான் எனக்கானப் பாடலை
உன் சாயலுள்ள ஒருவன் இசைக்கிறான் வேறொரு பாடலை
இருவரையும் கடக்கிறேன் எவ்வித சலனமும் இல்லாமல்
ஒவ்வொரு ரயில் பயணங்களிலும் தவிர்க்க முடியாமல் கடக்கிறேன்
பார்வையற்றவனின் புல்லாங்குழல் வழியே கசியும்
எவரோ ஒருவரின் நினைவுகளைச் சுமந்த பாடலை
ஏதோ ஒரு முடிவற்ற சாலையில் நீயும் இசைக்கக்கூடும்
என் நினைவுகள் சுமந்த பாடலை
என்றேனும் அது எனக்கான பாடல் என்பதை
நானே மறந்திருக்கக்கூடும்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.