பேச எதுவுமே இல்லையென்றாலும்
பேசியே
ஆகவேண்டும் என்றுணரும் பேரவஸ்தை
கோபத்தோடு நான்கு மணி நேரம் காத்திருந்தாலும்
கண்டதும்
இயல்பாய் பூத்திடும் பெரும்புன்னகை
சண்டையிட்டு வேறு திசைப் பார்த்து
பேசும்போதும்
கைகளை
விலக்கி கொள்ள விரும்பாத பெரும்பிணைப்பு
எத்தனை பேர் சுற்றி இருந்தாலும்
நீ இல்லாதபோது
நான்
உணர்ந்து கொள்ளும் பெரும்தனிமை
என் முகம் நிமிர்த்தி முன் நெற்றியில்
நீ முத்தமிடுகையில்
குழந்தையென
நான் அடையும் பேருவகை
நீண்ட பிரிவுக்கு பிறகு உன்னை
சந்திக்கும் நொடிகளுக்கு
முன்பு
வரை எனக்குள் புதைந்து கிடக்கும் பெரும்தவிப்பு
ஒரு மழை நாளில் நீ எனக்கு வேண்டாம்
என்று சொல்லி
எனக்குள்
நீ நிகழ்த்திவிட்டு போன பெரும்கலவரம்
கடைசியாய் நீ பரிசளித்துவிட்டு
போன பெரும்துன்பம்
எது நடந்தாலும் இப்போதும் உனக்காக
என்னை
காத்திருக்க வைத்திருக்கும் பெரும்நம்பிக்கை
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.