தடயங்களாக
விட்டு சென்றது காயங்களையும், வலிகளையுமே
வார்த்தைகளின்றி
வேறெதாலும் நீ இதை நிகழ்த்தவில்லை
ஆறவிடாமல்
பார்த்து கொள்வதில் தான் என் கவனமெல்லாம்
சேகரிக்கிறேன்
உன் முகம் தோன்றி மறையும்
ஒவ்வொரு
துளி இரத்தத்தையும்
உன்
தீண்டலின்போது அடைந்த சிலிர்ப்பை ஞாபகப்படுத்தி கொள்கிறேன்
வலியுணரும்
வேளைகளிலெல்லாம்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.