ஒன்றாம்
வகுப்பு படிக்கும் ஆர்த்தியின் உலகம்
நாற்காலிகளால்
நிறைந்தது…..
ஒவ்வொரு
நாளும் அவளுக்கு ஒவ்வொரு நிறம் பிடிக்கும்
பிடித்த
வண்ணங்களுக்கு ஏற்ப நாற்காலிகளும் மாறும்
ஆடும்
நாற்காலி, ஓடும் நாற்காலி, சுழலும் நாற்காலி என
ஒவ்வொன்றும்
ஒவ்வொரு விதம்
பள்ளி
போட்டிகளில் கூட பெயரைப் பார்த்து தான்
இசை
நாற்காலி போட்டியில் தன் பெயரை பதிவு செய்திருந்தாள்
போட்டி
ஆரம்பித்த போதே முடிவு செய்துவிட்டாள்
தன்னிடம்
இல்லாத நிறமான பச்சை நாற்காலி தான் தனக்கென்று
முதல்
சுற்றில் அவள் பச்சை நாற்காலிக்கு அருகில்
வரும்போதே
இசை நிறுத்தப்பட
சிரிப்பை
அடக்க முடியாமல் அமர்ந்து கொண்டாள்
அடுத்த
முறை அதில் வினோதினி அமர்ந்து கொள்ள
எதிலும்
அமராமல் உதட்டைக் கடித்து கொண்டே நின்றாள்
தோற்றதாய்
வெளியெற்றப்பட
அப்பாவின்
கழுத்தைக் கட்டி கொண்டு அழுகையினூடே கேட்டாள்
ஏன்
எனது நாற்காலியை இங்கே எடுத்து வரவில்லையென
கடவுள்
அவசர அவசரமாக தன் நாற்காலியின் வண்ணத்தை
பச்சையாக
மாற்றி கொண்டிருந்தார் அவளுக்கு தர….
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.