பிடிக்காத
மழையில் பிடித்த எனக்காக
நனையும் நொடிகளில்
என்
தனிமையைத் துடைக்க போராடும்
உன் அர்த்தமற்ற பேச்சுக்களில்
வீணான
என் கோபங்களை மாற்ற
மண்டியிடும் உன் பெருந்தன்மைகளில்
ஏதுமற்ற
பொழுதுகளில் எனக்காக
தேடியலைந்து வாங்கும் உன் பரிசு பொருட்களில்
எவ்வளவு
நேர பயணங்ளிலும் புன்னகையோடு
என்னை சாய்த்து கொள்ளும் உன் தோள்களில்
சாப்பிடாமல்
அடம்பிடிக்கும் தருணங்களில்
முகத்தை சுழித்து கொண்டு ஊட்டிவிடும் பருக்கைகளில்
தூங்கிய
பின் நெற்றியில் பதிக்கும்
உன் ஈர முத்தங்களில்
என எல்லாவற்றிலும்
நிறைத்து வைத்திருக்கிறாய்
எனக்கான இன்னொரு
தாய்மையை…..
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.