Wednesday 9 April 2014

இன்னொரு தாய்மை



பிடிக்காத மழையில் பிடித்த எனக்காக
      நனையும் நொடிகளில்
என் தனிமையைத் துடைக்க போராடும்
      உன் அர்த்தமற்ற பேச்சுக்களில்
வீணான என் கோபங்களை மாற்ற
      மண்டியிடும் உன் பெருந்தன்மைகளில்
ஏதுமற்ற பொழுதுகளில் எனக்காக
      தேடியலைந்து வாங்கும் உன் பரிசு பொருட்களில்
எவ்வளவு நேர பயணங்ளிலும் புன்னகையோடு
என்னை சாய்த்து கொள்ளும் உன் தோள்களில்
சாப்பிடாமல் அடம்பிடிக்கும் தருணங்களில்
      முகத்தை சுழித்து கொண்டு ஊட்டிவிடும் பருக்கைகளில்
தூங்கிய பின் நெற்றியில் பதிக்கும்
      உன் ஈர முத்தங்களில்
என எல்லாவற்றிலும் நிறைத்து வைத்திருக்கிறாய்
      எனக்கான இன்னொரு தாய்மையை…..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.