வாழ்வில் சில நேரங்கள் தூரங்களால்
ஆனவை
காற்று நிறைந்திருக்கும் இப்பெருவெளியில்
உனக்கும் எனக்குமான தூரம் எதனாலானவை
விடையற்று கிடக்கின்றன என் தனிமை
நடுங்கும் குளிரில் ஆடையற்றவளைப்
போல
கடக்கின்றேன் ஒவ்வொரு இரவையும்
ஒரு நாள் விருப்பம் மாறி நீ வரக்கூடும்
எனக்கான ஆடைகளுடன்
உன் எந்த நொடியும் ஈடுசெய்ய முடியாதவை
எனது இந்த நொடி தனிமையும், அதன்
தூரமும்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.