Tuesday 8 April 2014

தூரங்களைக் கடக்கும்போது



வாழ்வில் சில நேரங்கள் தூரங்களால் ஆனவை
காற்று நிறைந்திருக்கும் இப்பெருவெளியில்
உனக்கும் எனக்குமான தூரம் எதனாலானவை
விடையற்று கிடக்கின்றன என் தனிமை
நடுங்கும் குளிரில் ஆடையற்றவளைப் போல
கடக்கின்றேன் ஒவ்வொரு இரவையும்
ஒரு நாள் விருப்பம் மாறி நீ வரக்கூடும்
எனக்கான ஆடைகளுடன்
உன் எந்த நொடியும் ஈடுசெய்ய முடியாதவை
எனது இந்த நொடி தனிமையும், அதன் தூரமும்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.