நதியில் கால் பதிக்கையில் விரலிடுக்கில்
துள்ளி
விளையாடும் சிறு மீனாய்
சாலையோரம் நடக்கையில் அட்சதையென
விழும் இலையுதிர்கால ஒற்றை மலராய்
பேருந்தில் பக்கத்து பெண்மணியின்
குழந்தை
எதிர்பாராமல் கொடுக்கும் அன்பு முத்தமாய்
நெடுந்தூர ரயில் பயணங்களில்
மனம் வருடும் தென்றலாய்
வெகுநெர வாசிப்பிற்கு பிறகு புரிந்த
ஒற்றை கவிதை வரியாய்
ஏகாந்த தனிமையில் மனதொடு
மல்லுகட்டும் நினைவுகளாய்
கணத்த மனதொடு கழியும் இரவுகளில்
மகிழ்ச்சியை
தரும் மழையாய்
நீக்கமற நிறைந்திருக்கிறாய்
நீ நீயாக இல்லாமல் என் காதலாய்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.