Wednesday 9 April 2014

நீக்கமற நிறைந்திருக்கிறாய்



நதியில் கால் பதிக்கையில் விரலிடுக்கில்
      துள்ளி விளையாடும் சிறு மீனாய்
சாலையோரம் நடக்கையில் அட்சதையென
      விழும் இலையுதிர்கால ஒற்றை மலராய்
பேருந்தில் பக்கத்து பெண்மணியின் குழந்தை
      எதிர்பாராமல் கொடுக்கும் அன்பு முத்தமாய்
நெடுந்தூர ரயில் பயணங்களில்
      மனம் வருடும் தென்றலாய்
வெகுநெர வாசிப்பிற்கு பிறகு புரிந்த
      ஒற்றை கவிதை வரியாய்
ஏகாந்த தனிமையில் மனதொடு
      மல்லுகட்டும் நினைவுகளாய்
கணத்த மனதொடு கழியும் இரவுகளில்
மகிழ்ச்சியை தரும் மழையாய்
நீக்கமற நிறைந்திருக்கிறாய்
நீ நீயாக இல்லாமல் என் காதலாய்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.